மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது!

Date:

புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூ டியூப் பதிவாளரும் பிரபல ஜோதிடருமான இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக கொழும்பு – 02 இல் வசிக்கும் என்.எம்.தாஜுடீன் உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

29 செப்டம்பர் 2023 அன்று யூ ட்யூப் சேனலில் இந்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றியுள்ளார்.

இதன்படி இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...