அனுலா ரத்நாயக்க துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் – வெளியானது பரிசோதனை அறிக்கை!

Date:

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவரது உடலிலிருந்து துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு குறித்த பெண் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லையென பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய போது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.

இந்திநிலையில், அவரது இறுதிக் கிரியைகள் களனி – வெவெல்துவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...