அதிக மழையால் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

Date:

நாளாந்த மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தற்போது 76விகிதத்துக்கும் அதிகமாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப அனல் மின் உற்பத்தி குறைந்துள்ளதுடன், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலையால் நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளமையே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நாடு முழுவதும் வறண்ட காலநிலையுடன் காணப்பட்டது. இதனால், தேசிய மின்சக்தி அமைப்பு அனல் மின்சாரத்தை அதிகம் சார்ந்திருந்தது.

இதன் விளைவாக, மின்சார உற்பத்திக்காக நிலக்கரி மற்றும் எரிபொருளுக்கு திரும்ப வேண்டியிருந்தது. மின்சார உற்பத்தி செலவும் அதிகமாக இருந்தது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் பெய்த கனமழையால், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில், நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...