இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போரைத் தாண்டி ‘பயங்கரவாதமாக’ மாறிவிட்டது: பிரான்சிஸ் போப் ஆண்டகை

Date:

காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய உறவினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் போப் ஆண்டகை தனித்தனியாக சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆராதனைக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஸா பகுதியில் நிலவும் மோதல்களால் இரு தரப்பினரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமக்கு நன்றாகவே புரிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் போப் கூறியுள்ளார்

மேலும், காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் போரைத் தாண்டி பயங்கரவாதமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது. இது பயங்கரவாதம்.

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,  அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பயங்கரவாத எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பீட்டர்ஸ் சதுக்கத்தில் பலஸ்தீன தேசிய கொடிகளை ஏந்தியும், மனிதப்படுகொலை யை எடுத்துரைக்கும் காஸா போர்க் காட்சிகள் கொண்ட பதாகைகளையும் பலரும் ஏந்தியிருந்தனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...