சவூதி அரேபியா விரைவில் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும்!

Date:

சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர், விமானங்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

பல்வேறு நாடுகளுடனான வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே தமது விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்ததாக தெரிவித்தார்.

“எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீஷெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களை இலங்கைக்கு இயக்க முடிந்தது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...