அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமித்து புத்தர் சிலை நிர்மாணம்: ஜனாதிபதிக்கு முஜிபுர் கடிதம்

Date:

மரு­தானை ஆர்னோல்ட் மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் அமைச்­சரும் மேல்­மா­காண ஆளு­ந­ரு­மான  அலவி மெள­லானா நினைவு சன­ச­மூக நிலை­யத்­துக்கு பாதிப்பு ஏற்­படும் வகையில் புத்தர் சிலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­மைக்கு அப்­ப­குதி மக்கள் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

கொழும்பு மாந­கர சபை சுது­வெல்ல வட்­டார ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைப்­பா­ள­ரான கித்­­சிறி ராஜ­பக்ஷ பல­வந்­த­மாக அலவி மெள­லானா சன­ச­மூ­க நிலை­யத்­துக்கு முன்னால் புத்தர் சிலையை நிர்­மா­ணித்து வரு­வ­தாக அப்பகுதியிலுள்ள மக்கள் கொழும்பு மாந­கர சபைக்கு முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் முன்னாள் தொழில் அமைச்சர் அலவி மெள­லானா நினை­வாக அவர் வாழ்ந்த சுது­­வெல்ல பகு­தியில் குறிப்­­பிட்ட சன­ச­மூக நிலையம் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­து.

மரு­தானை ஆர்னோல்ட் மாவத்­தையில் வாழும் மக்­களில் பெரும்­பான்­மை­யினர் முஸ்லிம்­க­ளாவர். இங்கு புத்தர் சிலை நிறு­வப்­ப­டு­வது இன நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக அமையும் எனக் கூறப்­ப­டு­கி­ற­து.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­ததுடன் ஜனா­தி­ப­திக்கு கடிதம ஒன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்­ளார்.

கடி­தத்தில் சுது­வெல்ல மாந­கர சபை வட்­டா­ரத்தில் அமைந்­துள்ள அலவி மெள­லானா சன­ச­மூக நிலையம் உங்­க­ளது அமைப்­பா­ளரால் சட்­ட­வி­ரோ­த­மாக பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு நிர்­மாணம் நடை­பெ­று­கி­ற­து.

இப்­ப­கு­தியில் வாழும் குறைந்த வரு­மானம் பெறு­ப­வர்­களின் வரி நிதியில் இந்த சன­ச­மூக நிலையம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

மக்­களின் பயன்­பாட்டில் இருந்த இந்த நிலையம் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கொழும்பு மாந­கர சபையின் ஆணை­யாளர் உட்­பட அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்டும் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்­லை. உங்கள் அதி­கா­ரத்தை சம்­பந்­தப்­பட்ட அமைப்­பாளர் உப­யோ­கித்து சட்டவிரோத நிர்­மா­ணத்தை நிறுத்­து­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருக்­கிறார்.

எனவே உட­ன­டி­யாக இந்த சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்தை நிறுத்தி குறைந்த வரு­மானம் பெறும் மக்­களின் பாவ­னைக்கு சன­ச­மூக நிலை­யத்தை வழங்க ஏற்­பாடு செய்­யு­மாறு வேண்டிக் கொள்­கிறேன் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மூலம்: விடிவெள்ளி

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...