‘செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் கஹடோவிட்டவில் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு

Date:

செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும் (Artificial Inteligence and Future) எனும் தலைப்பில் மாணவர்களை அறிவுறுத்தும் செயலமர்வொன்று கஹடோவிட்டயில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வினை பஹன மீடியா எகடமி ஏற்பாடு செய்திருந்தது.

கஹடோவிட்ட இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதேசத்தின் 03 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
‘நியூஸ் நவ்’ இணையத்தள பிரதம ஆசிரியர் பியாஸ் மொஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பிரதான விரிவுரையினை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தென் கொரியாவில் இரு வார பயிற்சி பெற்ற, அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக அதிகாரியாக கடமை புரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
இவர் ஊடகத் துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...