காஸா நிலைமையால் முஸ்லிம் சமூகம் மன வேதனையில்: பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!

Date:

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார்.

காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை மனதில் கொள்ள வேண்டும். இது காஸாவில் உள்ள நமது பலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கான ஒற்றுமையைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம்.

புத்தாண்டுக்கான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு அரசாங்கம் கடுமையான தடையை விதித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் காரணமாக காஸாவில் இதுவரை 21 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலில் 9 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காஸா மற்றும் மேற்குக் கரையில் நிராயுதபாணியான பலஸ்தீனியர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாகிஸ்தான் உட்பட முழு முஸ்லிம் சமூகமும் மன வேதனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பாகிஸ்தானில் பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிக ஆரவாரத்துடன் நடப்பதில்லை.

இஸ்லாமிய குழுக்களின் எதிர்ப்புகளின் பின்னணியில் புத்தாண்டு கொண்டாடங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...