சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த தம்மிக்க!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடன் காய் நகர்த்தும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சிறுபான்மை கட்சிகளுடன் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் வர்த்தகர் தம்மிக்க பேரேரா அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையென அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...