சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த தம்மிக்க!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடன் காய் நகர்த்தும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சிறுபான்மை கட்சிகளுடன் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் வர்த்தகர் தம்மிக்க பேரேரா அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையென அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...