அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு: ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சுவிட்சர்லாந்து பயணமானார்.

அவரது உத்தியோகபூர்வ விஜயம் 12 நாட்களைக் கொண்டதாக அமையுமென என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் உகாண்டாவின் கம்பாலாவில் 19 ஆவது அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாடு திங்கட்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...