உச்சம் தொட்ட தேங்காய் விலை: மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது

Date:

இலங்கையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை அதிகரித்து வருவதாக தெங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

”தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500 மி.மீ மழைவீழ்ச்சியும், சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தென்னை அறுவடைக்கு தேவை.

ஆனால், கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் காணப்பட்டது. மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது.

அறுவடை குறைந்துள்ளமையால் தேங்காய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் மே மாதத்திற்குள் படிப்படியாக இந்த நிலை சீராகும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் அறுவடை குறைந்துள்ளமையால் சந்தையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் 70, 80 ரூபாவாக இருந்த சிறிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 100 ரூபாவை எட்டியுள்ளது.

100 ரூபா அல்லது அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாவை தாண்டியுள்ளது. எதிர்காலத்தில் இதனையும் விட விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் என தென்னை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...