சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்!

Date:

பொலிஸ் அதிகாரிகள் சிவில் ஆடையில் கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்வதற்காக வாகனங்களை நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என தெரிவித்து , தான் புதிய ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபா் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளாா்.

அந்த ஆலோசனை பட்டியல் நேற்று (19) பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.

நேற்று முன்தினம் (18) நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரினால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சாரதியொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த புதிய ஆலோசனைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டாா்.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...