ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை புனிதர்களாக திருநிலைப்படுத்தப்படுத்த தீர்மானம்: பேராயர்

Date:

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் புனிதர்களாக திருநிலைப்படுத்த அவர்களின் பெயர்களை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஈஸ்டர் தாக்குதல் நடந்து 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.

இதனால், தாக்குதலில் கொல்லப்பட்ட 273 பேரின் பெயர்களை பரிசுத்த சபைக்கு சமர்ப்பித்து அவர்களை புனிதர்களாக திருநிலைப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அவர்கள் நம்பிக்கையுடன் தேவாலயத்திற்குள் வந்ததன் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்கள் வீட்டில் இருந்திருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஈஸ்டர் திருப்பலி பூஜைக்கு வந்ததன் காரணமாக உயிர்களை தியாகம் செய்தனர்.

இவர்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதனை ஏப்ரல் 21 ஆம் திகதி அறிவிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாம் எவருக்கும் பயப்பட தேவையில்லை.நமக்கு நாமே பயப்பட வேண்டும் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...