பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் , குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...