பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய ‘ஓமன் ஏர்’

Date:

ஓமான் அரசுக்கு சொந்தமான ‘ஓமன் ஏர்’ அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது என விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தின்படி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், இலங்கையின் கொழும்பு மற்றும் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்படும்.

எவ்வாறெனினும், விமான நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டிற்கு ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கும்.

மற்றும் இந்தியாவில் லக்னோ, உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவின் திருவானந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கான மேலதிக விமான சேவையையும் குறித்த நிறுவனம் ஆரம்பிக்கும்.

இது தவிர மேலும் பல பகுதிகளுக்கும் சேவையினை விஸ்தரிக்க ஓமன் ஏர் திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...