76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

சுதந்திரமான தேசத்தில் சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கு பொருளாதார சுதந்திரம் இன்றியமையாததாகும்.

அதற்கமைய  இன்று 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் ஆதரவில் குவைத்திலுள்ள நமா சமூக சேவை நிறுவனத்தின் உதவியோடு வவுனியா வாழவைத்த குளம் பகுதியில் அமைந்துள்ள அல் பழாலா கல்வி நிறுவன வளாகத்தில் சுயதொழில் செய்வோருக்கான உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது வடமாகாணத்தில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கான சுயதொழில் செய்வதற்கான உணவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வை அல்ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் நூருல்லா அவர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...