பிரித்தானிய மன்னர் சார்லஸ்க்கு புற்று நோய் பாதிப்பு!

Date:

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

75 வயதான மன்னர், சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான தகவலில், மன்னருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற் பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

சிகிச்சையில் இருக்கும் காலப்பகுதியில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு வைத்தியர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை வழக்கம் போல் மேற்கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...