குப்பி விளக்கு சர்ச்சை: மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Date:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்தவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில்,ஊடகப் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தேவை ஏற்பட்டால் குப்பி விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என நோயல் பிரியந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...