நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு: மக்களுக்கு தவறான மருந்துகளும் விநியோகம்

Date:

நாடளாவிய ரீதியில் பரவலாக காணப்படும் 40, 000க்கும் அதிகமான போலி வைத்தியர்களை கண்டுபிடிக்க சோதனைகள் மேற்கொள்ள, அவர்களுக்கான அபராதத் தொகை மற்றும் சிறை தண்டனை வழங்குவதற்காக 12 பேருடன் கூடிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வைத்திய நிலையத்திலிருந்தும் அனுமதி வழங்கப்படும் சான்றிதழின்றி போலி வைத்தியர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.

இவர்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் தவறான மருந்துகளை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

மேலும், வைத்தியர்களின் பற்றுச்சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கும் மருந்தகங்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...