நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு: மக்களுக்கு தவறான மருந்துகளும் விநியோகம்

Date:

நாடளாவிய ரீதியில் பரவலாக காணப்படும் 40, 000க்கும் அதிகமான போலி வைத்தியர்களை கண்டுபிடிக்க சோதனைகள் மேற்கொள்ள, அவர்களுக்கான அபராதத் தொகை மற்றும் சிறை தண்டனை வழங்குவதற்காக 12 பேருடன் கூடிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வைத்திய நிலையத்திலிருந்தும் அனுமதி வழங்கப்படும் சான்றிதழின்றி போலி வைத்தியர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.

இவர்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் தவறான மருந்துகளை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

மேலும், வைத்தியர்களின் பற்றுச்சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கும் மருந்தகங்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...