கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப் பணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Date:

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப்பணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பிரேரணையொன்றை முன் வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தற்போதுள்ள கட்டுப்பணம் குறைவானதாக காணப்படுவதால்  வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவ்வாறு வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் அவசியம் என்பது  சட்டமாக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகளை தடுக்கும் வகையில்  தற்போதும் நடைமுறையிலுள்ள விரலுக்கு மை பூசுவதை இரத்துச்செய்யவும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தலுக்கு தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவின தொகை வித்தியாசப்படும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதுதொடர்பான வழிகாட்டல் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவி ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...