கச்சத்தீவு விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Date:

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதனை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை ன வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘‘இலங்கையின் பன்முகத்தன்மையை பலமாக மாற்ற வேண்டும். பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து வாழ வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.

பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. அதை புரிந்து கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ஒருவரே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்.

நாடு வீழ்ந்தால் நாட்டின் அனைத்து இனங்களும் வீழ்ச்சியடையும், நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். மேலும் பல வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நாடு வீழ்ச்சியடைந்த போது நாட்டை வழிநடத்தியது யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே கச்சத்தீவு விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதனை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயத்தை பற்றி தற்போது பேச தேவையில்லை.‘‘ என்றார்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...