பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Date:

பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை, நாளை (14) செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கூடவுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வியாழக்கிழமை (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலை 9.30 மணிக்குபாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள், அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான நான்கு ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளதுடன், ஜெயா கென்டெய்னர் டேர்மினல்ஸ் லிமிடட் நிறுவனத்தின் (2022)ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கை விவாதமின்றி நிறைவேற்ற சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...