அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

Date:

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே இஸ்ரேலிய இராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ராக்கெட்டுகள் அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பொதுமக்களுக்கு எதிரான சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டுகள் காசாவில் இருந்து ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் அகுஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலுக்கான சைரன்கள் எதுவும் கேட்கவில்லை.

இந்த நிலையில், இன்று சைரன் ஒலித்ததற்கான காரணத்தை இஸ்ரேல் இராணுவம் உடனடியாக தெரிவிக்கவில்லை. அதேபோல், இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை பிரிவு தங்களுக்கு உயிரிழப்புகள் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதலின் பேரழிவுகளை தாங்கி வந்த நிலையில், காசாவால் இன்னும் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவும் திறன் இருக்கிறது என்பதை இந்த தாக்குதல் உணர்த்துகிறது.

காசா முழுவதும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் இந்த வாரம் தீர்ப்பு வழங்கிய போதிலும், இஸ்ரேல் இராணுவம் ரபா மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...