திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை பூர்த்திசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள்..!

Date:

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (25) வட்டதெனியவில் அமைந்துள்ள கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியில் இனிதே நடைபெற்றது.

கதீஜதுல் குப்பரா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். பாரூக் (அல் அஷ்ஹரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

லைப்பொண்ட் நிறுவனத்தின் வளவாளர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்கள் இந்நிகழ்வில் விசேட உரை நிகழ்த்திய அதேவேளை லைப்பொண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன், கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியின் செயலாளர் சாஜஹான் உடையார் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவிகள்,பெற்றோர்கள்,கல்லூரியின் விரிவுரையாளர்கள்,பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

லைப்பொண்ட்  நிறுவனம் இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமாகும். உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...