திருகோணமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அமைச்சர் சுசில் இணக்கம்!

Date:

கிழக்கு மாகாணம் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டது தொடர்பிலும், அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள விடயத்தையும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றில் எடுத்துரைத்து அந்த மாணவிகளின் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரை கேட்டுக்கொண்டார்.

நேற்றைய (05) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந்த விடயத்தில் பேசிக்கொண்டிருந்த போது இதற்கு பதிலளிக்கும் விதமாக  கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது  இது சம்பந்தமான விசாரணைகள் எல்லாம் முடிவடைந்து விட்டது. பெறுபேற்றை உடனடியாக வெளியிடுமாறு நான் பரீட்சை திணைக்கள ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்திருந்தார்.

விரைவில் இந்த பெறுபேறுகளை வெளியிடுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன். உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடம் உறுதிபட தெரிவித்தார்.

குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவிகளின் பெறுபேறுகளை இந்த வாரத்தினுள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பெறுபேற்றை இந்த வாரமே வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுசில் உறுதியளித்துள்ளதுடன் இந்த விடயத்தில் பெரிய தவறு நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வருகிறது.

இது முஸ்லிங்களின் கலாசார பர்தா ஆடை அணிந்து வந்தமையால் ஏற்பட்ட விடயம். இந்த பிரச்சனைக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...