பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு மத்திய வங்கியின் விசேட செயற்திட்டம்

Date:

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையிலும் பார்க்க தற்போது குறித்த தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தற்போது இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று முறைக்கு மிகாமல் சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கடன் வட்டியில்லாதது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...