காதலுக்காக அடித்துகொண்ட பாடசாலை மாணவர்கள்: மெனிக்ஹின்ன பகுதியில் 5 மாணவர்கள் கைது!

Date:

மத்திய மாகாணத்தின், மெனிக்ஹின்ன பகுதியில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் 16 -18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பாடசாலை மாணவிக்காகவே குறித்த சண்டை இடம்பெற்றுள்ளதுடன், 17வயதுடைய மாணவன் பலத்த காயங்களுக்கு இலக்காகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25 ஆம் திகதி இரவு 7.30 க்கு திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதுடன் மெனிக்ஹின்ன பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக கல்வித்துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும்இ மாணவர்களுக்டையேயான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

அண்மையில் ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றன. 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் மற்றுமொரு பாடசாலை மாணவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும், 17 வயதுடைய மாணவரொருவர் தனியார் வகுப்புக்கு அருகில் அழைத்துச் சென்று பலமாகத் தாக்கியதில் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...