பெரு நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Date:

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று, வெள்ளிக்கிழமை, தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி அமைப்பான United States Geological Survey (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அதேபோல, கடற்கரையின் சில பகுதிகளில் 1 முதல் 3 மீற்றர் உயரம் வரையுள்ள அலைகள் எழக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பின்னர் அது எச்சரிக்கையை திரும்பப் பெற்றுவிட்டது. இப்போது, நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பெரு நாட்டில் சுமார் 33 மில்லியன் மக்கள் வாழும் நிலையில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் அந்நாட்டை தாக்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி...