ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: சர்வ மத தலைவர்கள் கோரிக்கை

Date:

ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்துக்குரிய களனி வஜ்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கார்டினல் ரஞ்சித் மல்கம் மற்றும் வணக்கத்துக்குரிய சோம ரத்தின தேரர், வணக்கத்துக்குரிய ஜீனானந்த தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கலாநிதி  அஷ்ஷெய்க் ஹசன் மௌலானா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடான ஓரினச்சேர்க்கை சட்டங்கள் நாகரிக சமூகத்தை அழிக்கின்றது என்ற வகையில் ஜனாதிபதி இச்சட்டவாக்கத்தை அமுல்படுத்தக்கூடாது என்றும் இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...