ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: சர்வ மத தலைவர்கள் கோரிக்கை

Date:

ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்துக்குரிய களனி வஜ்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கார்டினல் ரஞ்சித் மல்கம் மற்றும் வணக்கத்துக்குரிய சோம ரத்தின தேரர், வணக்கத்துக்குரிய ஜீனானந்த தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கலாநிதி  அஷ்ஷெய்க் ஹசன் மௌலானா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடான ஓரினச்சேர்க்கை சட்டங்கள் நாகரிக சமூகத்தை அழிக்கின்றது என்ற வகையில் ஜனாதிபதி இச்சட்டவாக்கத்தை அமுல்படுத்தக்கூடாது என்றும் இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...