நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் ஜீவன் தொண்டமான்

Date:

களனிவெளி தோட்ட முகாமைத்துவத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தின் பின்புலத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மூவர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகினர்.

மேலும், நகர்த்தல் மனுவினை தாக்கல் செய்தே இம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...