ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கையானது இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரச அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனி பொலிஸ் நிலையமொன்றினை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், அச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று இன்று அரச அச்சகத்திற்கு சென்று பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள (Department of Government Printing)  பிரதானி கங்கானி கல்பனா லியனகே (Gangani Kalpana Liyanage) மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...