இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உபகுழுவின் அமைச்சரவையின் கட்டளைகளுக்கு இணங்க பொருத்தமான யாப்பு உருவாக்கப்படும்.

புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்க மேற்படி குழு ஏற்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...