இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு, வெளிவிவகார, மின்சக்தி மற்றும் எரிசக்தி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டாக முன்வைத்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உபகுழுவின் அமைச்சரவையின் கட்டளைகளுக்கு இணங்க பொருத்தமான யாப்பு உருவாக்கப்படும்.

புதிய யாப்பு விதிகளை உருவாக்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்க மேற்படி குழு ஏற்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...