சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தக்கோரி ‘கண்டி மக்கள் சபையால்’ ஸ்டிக்கர் பிரசாரம்

Date:

சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் கண்டியில் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் ஸ்டிக்கர் பிரசார விழிப்புணர்வொன்று கண்டி மக்கள் சபையால்  கண்டி நகரில் கடந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது தேர்தலின் நியாயமான மற்றும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியும் ஸ்டிக்கர்கள்,போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மக்கள் இடையேயான விழிப்புணர்வை மேம்படுத்தி, தேர்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்த உதவுவதுடன், வன்முறைகளுக்கு எதிரான சமூக அக்கறையை தூண்டும் முயற்சியாகும்.

மேலும் நிகழ்ச்சியில் மக்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, சட்டவிரோதமான முறைகளை பின்பற்றாதது மற்றும் சட்டத்திற்கேற்ற முறையில் தேர்தல் நடத்துவது அவசியமாகும் என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...