விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களும் இரத்து

Date:

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் படி, குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றையதினம் (03) வெளியிட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை, அண்மையில் சிறிய நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஏக்கருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்துவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் கடந்த மாத தொடக்கத்தில் சிறு நெல் விவசாயிகளுக்கு நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்துக்காக இரண்டு ஏக்கர் வரையிலான ஏக்கருக்கு 15,000 ரூபா வழங்குவதற்கு  அமைச்சரவை தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...