ஐ.நா: காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறும் தீர்மானம்!

Date:

பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

இஸ்ரேல் தொடர்ந்து சர்வதேச போர் விதிகளை மதிக்காமல் காசா மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீனம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளது.

தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்திருந்தாலும், இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கான முயற்சியை எடுக்காது என்பது இஸ்ரேலின் நடவடிக்கை மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...