மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹனீப் யூசுப் இன்று வியாழக்கிழமை (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எக்ஸ்போ லங்கா குழுமத்தின் ஸ்தாபகரும் இலங்கையின் வர்த்தக துறையில் முக்கிய பிரமுகருமான ஹனீப் யூசூப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தளவாடங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட யூசுப் , இந்த நியமனத்தின் மூலம் தனது வணிக நிபுணத்துவத்தை பிராந்திய நிர்வாகத்தில் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.