புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தம்!

Date:

நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் 3 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளை தொடர்ந்து பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே குறித்த 3 வினாக்களுக்கும் உரிய மொத்த புள்ளிகளைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்த போதிலும் குறித்த 3 கேள்விகள் மட்டுமல்லாது மொத்தமாக 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானதாக பெற்றோர் முன்வைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த 8 வினாக்கள் தொடர்பாக ஆதராங்களுடன் முன்வைக்குமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் விசாரணைகளை தொடர்ந்து மாணவர்களுக்கு பெருமளவில் அநீதி ஏற்படாதாவாறு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அதுவரை தற்காலிமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...