கடந்த கால பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும்: வெளிவிவகார அமைச்சர்

Date:

‘இனம், மதம், வர்க்கம் உள்ளிட்ட வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கை பிளவுபட்டுள்ள சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘அனைவரும் எதிர்பார்த்தப்படி வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் செயல்முறையைப் பின்பற்றி,  இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார். அதேநேரம் அரசியலமைப்பு நடைமுறைகளின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நவம்பர் 14, அன்று இடம்பெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை,  மூன்று அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை இயங்கி வருகிறது. வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றும் நான் மேலும் ஐந்து அமைச்சுக்களை கவனித்து வருகிறேன்.

உங்களில் பெரும்பாலானவர்களை என்னால் தனித்தனியாகச் சந்திக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நெருங்கிய தொடர்பைத் தொடர விரும்புகிறேன்.

ஜனாதிபதியும் இராஜதந்திரிகளை சந்திப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் ஆரம்பத் திட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, புதிய அரசாங்கத்தின் முன்னோக்கிச் செயற்படுகளை முழுமையாக கவனிக்க முடியும். இருதரப்பு தொடர்பான விடயங்களில் அந்த கட்டத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் விரிவான ஈடுபாடுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில்இ இலங்கை மக்கள் புதிய நெறிமுறை அரசியல் கலாசாரத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு ஆணைக்கு வாக்களித்தனர்.

ஜனாதிபதி குறிப்பிட்டது போல், இந்த மாற்றம் பல படிகளை உள்ளடக்கியது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதும் வளர்ச்சியைத் தூண்டுவதும் மிக முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், இலங்கைக்கு தங்கள் ஆதரவை வலியுறுத்தி வந்த ஐ.எம்.எப் குழுவுடன் நாங்கள் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மற்றும் சீர்திருத்தத் திட்டம் தொடர்பான அடுத்த கட்டத்தில் நாங்கள் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளது. ஊழலை ஒழித்தல், பொதுச் சேவையில் செயல்திறன், சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரசியல் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். பொருளாதார வெற்றி இந்த துணை தூண்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இலஞ்சம் மற்றும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற உறுதிமொழிகளுக்கு இணங்க, சில முக்கிய விடயங்களில் நாங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு ஏற்கனவே ஊழல் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.’ என்றார்.

இதேவேளை காஸாவில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு மோதலின் பரந்த தாக்கம், குறிப்பாக லெபனானில் ஏற்பட்டுள்ள பரந்த தாக்கம் குறித்து நாட்டின் ஆழ்ந்த கவலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...