வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Date:

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் கிருமி தொற்றுகள் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால்  விரைவில்  சிகிச்சை பெறுமாறு பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் உண்ணும் உணவுகள் சுத்தமாகவும், புதியதாகவும், சூடாகவும் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுட்டாறிய நீரை  அல்லது போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை அருந்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...