‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’: மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்க புதிய திட்டம்

Date:

பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை, விதிமீறல்கள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள விரைவாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 2025 ஜனவரிக்கு பிறகு வட்ஸ்அப் மற்றும் இணையம் மூலமாகவும் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த திட்டத்திற்கு பொறுப்பாக மக்கள் தொடர்பு அதிகாரியாக அருண பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தங்கள் முறைப்பாடுகளை அறிவிக்க,
தொலைபேசி – 011-2092720 / 011-2092721
தொலைநகல் – 011-2092705
மின்னஞ்சல் – operationroomwpe@gmail.com

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...