மக்கள் விடுதலை முன்னணி செயலாளரை சந்தித்த ஷுரா சபை..!

Date:

தேசிய ஷூரா சபையின் உயர்மட்டக் குழுவொன்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை நேற்று (06) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியது.

இச்சந்திப்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் பளீல், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், தேசிய ஷூரா சபையின் முன்னாள் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரான் நாட்டின் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்,சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஸூர், சபையின் உப தலைவரும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவருமான சட்டத்தரணி ஜாவித் யூஸுப் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று மற்றும் வழிநடாத்தற் குழு உறுப்பினர் இக்ராம் அவர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பிற்கான ஏற்பாட்டை பிரதியமைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...