மக்கள் விடுதலை முன்னணி செயலாளரை சந்தித்த ஷுரா சபை..!

Date:

தேசிய ஷூரா சபையின் உயர்மட்டக் குழுவொன்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை நேற்று (06) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியது.

இச்சந்திப்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் பளீல், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், தேசிய ஷூரா சபையின் முன்னாள் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரான் நாட்டின் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்,சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஸூர், சபையின் உப தலைவரும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவருமான சட்டத்தரணி ஜாவித் யூஸுப் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று மற்றும் வழிநடாத்தற் குழு உறுப்பினர் இக்ராம் அவர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பிற்கான ஏற்பாட்டை பிரதியமைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...