உலக முஸ்லிம் லீக்கின் இலங்கை கிளையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கையளிப்பு

Date:

சவூதி அரேபியா மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற உலக முஸ்லிம் லீக்கின் கொழும்பு அலுவலகம் ஏற்பாடு செய்த அண்மையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று கொலன்னாவை மங்களபாய விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளராக செயற்படுகின்ற அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் பின் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் உயர் அதிகாரிககள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பெறுமதி வாய்ந்த நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1780 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா 9000 பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக இந்த அலுவலகமானது இலங்கையின் பல பாகங்களிலும் பாதிக்கப்படக்கூடிய சகல இனங்களையும் சேர்ந்த மக்களுக்குமான நிவாரணங்களை வழங்கி வருவதோடு ஆதரவற்றோர் மற்றும் தேவையுடையவர்களுக்கான உதவிகளையும் இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...