முழு உலகிலும் அமைதியும் செழிப்பும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்: சவூதி அரேபிய தூதுவரின் புத்தாண்டு வாழ்த்து

Date:

முழு உலகமும் அமைதியும் செழிப்பும் அடைய இறைவன் அருள் புரியட்டும் என்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் எனது சார்பிலும் இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும் எனது சக ஊழியர்களின் சார்பிலும் இலங்கை நட்பு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாண்டு இலங்கைக் குடியரசிற்கும் அதன் மேன்மைமிகு மக்களுக்கும் நன்மை, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும்.

எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவு அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் எனவும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...