எம்.பிக்களின் நாளாந்த உணவுக்கான தொகை ரூ.2,000 ஆக அதிகரிப்பு

Date:

பாராளுமன்றத்தில் வழக்கப்படும் உணவுகளின் விலையை அதிகரிக்கும் திட்டம்   அமைச்சரவையின் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறைடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டு வந்தது.

காலை உணவு – 100
பகல் உணவு – 300
மாலைநேர தேநீர் – 50

அதற்கமைய அந்த கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு – 600
பகல் உணவு – 1200
மாலைநேர தேநீர் – 200. பெப்ரவரி மாதம் முதல் புதிய விலை அமுலுக்கு வரும்.

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...