சுபோதினி அறிக்கையின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு பட்ஜெட்டில் உள்ளடக்கப்படவில்லை: ஜோசப் ஸ்டாலின்

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பான ‘சுபோதினி குழு அறிக்கைக்கு’ இவ்வவருடம்  வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லையென  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

குறித்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுபோதினி குழு அறிக்கையின் பிரகாரம், சம்பள முரண்பாடுகளை முற்றிலுமாக நீக்குவதற்கு 46 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும், 2022 பட்ஜெட்டில் இந்த சம்பள முரண்பாடுகளில் 1/3 பங்கு நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றாலும், இவ்வருடம் வரவு செலவுத் திட்டமும் அதில் கவனம் செலுத்தவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் விவாதித்து, ஒரு பொதுவான தீர்வை எட்டுவேன், பின்னர் அரசாங்கத்துடன் விவாதிப்பேன் என்றும் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...