கட்டுப்பணத்தை மீளச் செலுத்த முடிவு:28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

Date:

2023 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலுக்காக கட்சிகளாலும் சுயாதீன வேட்பாளர்களாலும் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தினை- திருப்பி செலுத்துவதற்கு நேற்றுமுன்தினம் (17) பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்பட்ட 2025-1 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டத்தின் 2(3) பிரிவுக்கு அமைய பற்றுச்சீட்டை முன்வைப்பதன் மூலம் கட்டுப் பணத்தை மீளச் செலுத்த வேண்டும் என குறித்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பற்றுச்சீட்டையும் கட்டுப்பணத்தை மீளப்பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தையும் கட்டுப்பணம் செலுத்திய மாவட்ட அலுவலகத்துக்கு இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஒழுங்கில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அவர்களுடைய கட்டுப்பணத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...