தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கருகில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக தென்னகோன் உட்பட எட்டு பேருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் தேசபந்து தென்னகோன் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதனைத் தொடர்ந்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த (20) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...