உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி திங்கட் கிழமை மாலை செவ்வாய்க்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 துல் கஃதஹ் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 ஏப்ரல் 30ஆம் திகதி புதன் கிழமை ஹிஜ்ரி 1446 துல் கஃதஹ் மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA)ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.