‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு (படங்கள்)

Date:

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’  நூல் வெளியீட்டு விழா (09) வெள்ளிக்கிழமை  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள ‘ஜெஸ்மின்’ அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அப்றார் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர், சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூஸூப் அவர்களும் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் கௌரவ அதிதியாகவும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அஸாத் சாலி அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது நிகழ்வில் டாக்டர் ஷாஃபியின் கடந்த காலகட்ட போராட்டங்கள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

 ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் புத்தகத்தை மதிப்பாய்வு செய்ததுடன் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முதல்வரும் இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத், மற்றும்  திறந்த பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் திருமதி சுமையா ஷெரிபுதீன் அவர்களும் உரையாற்றினர்.

புத்தகத்தின் முதல் பிரதியை டாக்டர் ஷாஃபி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப்பிடம் வழங்கி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செயலாளர் அஷ்ஷேக் அர்காம் நூராமித், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தினகரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் செந்தில் வேலவர், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் ஆசிரியர்கள், டாக்டர் ஷாஃபியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் மண்டபம் நிறைந்து கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...