பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 77 ஆவது தினத்தை நினைவுகூரும் நக்பா தின நிகழ்வு

Date:

பலஸ்­தீன பூமி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யுடன் 77 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன.

இதனை முன்­னிட்டு  விசேட நக்பா தின நிகழ்வு  கொழும்பில் உள்ள பலஸ்தீன அரசின் தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவின் ஏற்பாட்டில்  ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் மஹிந்த சில்வா கேட்போர் கூடத்தில் மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

‘நக்பாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச நடவடிக்கை மற்றும் பலஸ்தீனிய மக்களின் மறுக்க முடியாத உரிமைகளை உணர்தல்’என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்வார்கள்.

மதத் தலைவர்கள், கொழும்பில் உள்ள இராஜதந்திர தூதரக அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலஸ்தீன ஆதரவு நண்பர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...